Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹாளய அமாவாசை பேரூரில் திரண்ட ... நாளை நவராத்திரி முதல் நாள்! நாளை நவராத்திரி முதல் நாள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் நவராத்திரி கலைவிழா இன்று துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 செப்
2014
12:09

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், நவராத்திரி கலை விழா இன்று துவங்குகிறது. அக்டோபர், 3ம் தேதி முடிய, சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கிறது. தஞ்சை, பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா, 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு கலை விழா இன்று முதல் துவங்குகிறது. ஒவ்வொரு நாளும் மாலை, 6 மணி முதல் இரவு, 8 மணிவரை பெரியநாயகி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. நவராத்திரி கலை விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, இன்று இரவு அம்பாள் மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு, ராஜமுந்திரி துளசி விஷ்வநாத குழுவினரின் வாய்பாட்டு, பெங்களூர் சுவேதா லெஷ்மன் குழுவினரின் பரதநாட்டியம் நடக்கிறது. 25ம் தேதி, அம்பாள் மீனாட்சி அலங்காரத்துடனும், 26ம் தேதி, அம்பாள் சதஸ் அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 27ம் தேதி காயத்ரி அலங்காரத்துடனும், 28ம் தேதி அன்னபூரணி அலங்காரத்துடனும், 29ம் தேதி அம்பாள் கெஜலெட்சுமி அலங்காரத்துடனும், 30ம் தேதி சரஸ்வதி அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அக்டோபர், 1ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடனும், 2ம் தேதி, மகிஷாஸ்வரமர்த்தினி அலங்காரத்துடனும், 3ம் தேதி, விஜயதசமி அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வொருநாளும் இரவு பரதநாட்டியம், குச்சிப்புடி, வீணை இசை, வாய்ப்பாட்டு, மோகினி ஆட்டம், வயலின் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு, பிரஹார மண்டபத்தில் தசாவதார கொலு கண்காட்சி நடக்கிறது.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar