பதிவு செய்த நாள்
07
அக்
2014
02:10
காஞ்சி மடத்தில்ஒருநாள் மதியம் பெரியவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோகுறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார்.ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்றுநின்றிருந்தது. அதற்கு வாழைப்பழம் தருமாறு பணித்தார். ஆனால், வாங்க மறுத்துவிட்டது. அதற்கு கொஞ்சம் சாதம் கொடுக்க ஏற்பாடு செய்தார். கண் மூடி திறப்பதற்குள் வேகமாக சாப்பிட்டு விட்டு, மரத்தில் ஏறி மறைந்தது. அதன்பிறகு, இதுவேதினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு கோவிந்தா என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தார். ஒருநாள் அந்த குரங்கு நீண்டநேரமாகியும் சாப்பிட வரவில்லை. சாப்பிட மனமின்றி, பெரியவர்காத்திருந்தார். அன்று, மடம் அருகில் இருந்த நாராயண அய்யர் வீட்டிற்குள் குரங்கு நுழைந்திருக்கிறது. அதைக்கவனிக்காத அய்யர், கதவைப் பூட்டி விட்டு மடத்திற்கு வந்து விட்டார்.தான் புதிதாக வாங்கிய நிலத்தின் பத்திரத்தை,பெரியவரிடம் கொடுத்து ஆசி பெறுவது அவரின் நோக்கம். பெரியவரிடம் பத்திரத்தைக் கொடுப்பதற்காக பைக்குள் கையை விட்டார் நாராயண அய்யர். ஆனால், பத்திரத்தைக் காணவில்லை. அவர் திகைத்தார்.நாராயண அய்யரே! என்ன தேடறீர்.... நான் குரங்கைத் தேடறேன். நீர் பத்திரத்தைத் தேடறீரோ.... என்ற பெரியவர்,போங்கோ... போங்கோ.... ஆத்துல போய் தேடிப் பாருங்கோ.... நான் தேடுறது மட்டுமில்லாமல், நீங்கதேடுறதும் கெடைக்கும்.... என்றார். விறுவிறுஎன வீட்டுக்கு வந்த அய்யர்கதவைத் திறக்க,சரலேன குரங்குஒரு பையுடன் ஓடுவதைக் கண்டார். அந்த பையைப் பார்த்ததும் தான், அதில்பத்திரத்தை வைத்ததுநினைவிற்கு வந்தது.குரங்கைத் துரத்தியபடிஅவரும் பின்தொடர்ந்தார். தெருவிலுள்ள எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.ஓடிய குரங்கு மடத்திற்குள் நுழைந்தது.பெரியவர் அதனிடம் அன்புடன், கோவிந்தா..... உனக்கு பசிக்கலையா... எங்கே போயிட்ட.... என்று கேட்க, அய்யரும் ஐயோ குரங்கு ...பத்திரம்....பத்திரம்.... என பதட்டத்துடன் ஓடி வந்தார். பெரியவர் அவரிடம்,பயப்படாதீங்கோ.... குரங்கும் பத்திரமா இருக்கு! அதன் கையில் பத்திரமும் பத்திரமாத் தான் இருக்கு என்று சொல்ல அங்கே ஒரே சிரிப்பு வெடி... அதன் பின், தன் முன் குரங்கு போட்ட பத்திரத்தை எடுத்த பெரியவர், அய்யரிடம் வழங்கி ஆசியளித்தார்.