வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த, துர்க்கை அம்மன் பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை நகர் மத்தியப்பகுதியில், சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமையில் சிறப்பு பூஜை நடக்கிறது. நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணிக்கு அபிேஷக பூஜைக்குப்பின், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.