விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பில் 11 லட்சத்து 83 ஆயிரத்து 975 ரூபாய் காணிக்கை இருந்தது. விருத்தாசலம் விரு த்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறந்து, காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் சிவஞானம், செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் 9 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. விருத்தாசலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள், அபிராமி தொழிற் பயிற்சிப் பள்ளி மாணவர்கள், கடலுõர் கே.என்.பேட்டை மகளிர் சுய உதவிக்குழுவினர் காணிக்கைகளை எண்ணினர். அதில், 11 லட்சத்து 83 ஆயிரத்து 975 ரூபாய் இருந்தது. தங்கம், வெள்ளிப் பொருட்கள் ஏதுமில்லை. கடந்த ஜூன் மாதம் உண்டியல் திறப்பில் 7 லட்சத்து 20 ஆயிரத்து 771 ரூபாய் காணிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், திருப்பணி உண்டியலில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 972 ரூபாய் காணிக்கை இருந்தது.