நாபளூர்: அகத்தீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 64 பைரவர்களுக்கு சிறப்புப் பூஜை நேற்று நடைபெற்றது. திருத்தணியை அடுத்துள்ள நாபளூர் அகத்தீஸ்வரர் கோயிலில் 64 யாக சாலைகள் அமைக்கப்பட்டு சந்தி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.