கோவை : ராம்நகரில் உள்ள ஐயப்பா பூஜா சங்கத்தில் ஸ்ரீமத் நாராயணீயம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. பெங்களூரு ஸ்ரீதர் சர்மா சொற்பொழிவாற்றினார். இந்த உலகில் வாழும் அனைவரும் எல்லா வளமும் பெற்று அன்பும், அமைதியும் நிலைத்து வாழவேண்டும் என, பக்தர்கள் இறைவனை துதித்து பாராயணம் செய்தனர். ஐயப்பா பூஜா சங்க தலைவர் லட்சுமணன், செயலாளர் விஸ்வநாதன், துணைத்தலைவர் கணபதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.