தெய்வத்தைக் குறிக்க படித்தவர், பாமரர் என்று வித்தியாசம் இல்லாம் எல்லாரும் பயன்படுத்தும் வார்த்தை ஸ்வாமி. ஸ்வாமி என்கிற வார்த்தையில் உள்ள ஸ்வம் என்பதற்கு சொத்து என்பது அர்த்தம். இன்னும் எளிமையாக இலக்கணமாகச் சொன்னால் உடைமை. ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது சொத்தினை உடையவர். ஆண்டவனுக்கு எது சொத்து? நாம்தான். என் ஸ்வாமி என்றால், என்னை சொத்தாக உடையவர் என்று அர்த்தம். ஒரு சொத்து யாருக்கு உரியதோ, அவர்தானே அதற்கு எஜமானர்? அப்படிப் பார்த்தால் நாம் ஸ்வாமியின் சொத்து என்பதால் அவர்தான் நமக்கு எஜமானர்.