மயிலம்: திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்திலு ள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. மயிலம் சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், கொல்லியங்குணம், பாதிராபுலியூர், ஆலகிராமம் கோவிலில் வழிபாடு நடந்தது.