Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இத்தாலி என்றாலும்... இவருக்கு ... இரண்டு தண்டபாணி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒன்றே செய்யுங்கள்! நன்றே செய்யுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2014
02:11

 உலகில் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது மட்டுமே உண்மை. மற்ற அனைத்துமே பொய்.  கடவுள் எங்கும் நிறைந்துஇருக்கிறார். எப்போதும்அவர் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார். கடவுள் எந்த வேலையும் செய்வதில்லை. ஆனால்,அவரின்றி ஓர் அணு கூட அசைவதில்லை. என்றுமே வற்றாத ஆன்மிகச் செல்வ வளமே நம் தேசத்தின் தனிப்பெருமை. அதைப்பாதுகாக்க வேண்டியது நம் கடமை. ஊ  நேரம் ஓடிக் கொண்டேஇருக்கிறது. காலத்தை மதிக்க வேண்டியது நம் பொறுப்பு. விநாடி நேரத்தைக் கூட வீணாக்காதீர்கள்.  பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வேலையைத் தள்ளிப் போடாதீர்கள். செய்ய நினைக்கும் நல்ல செயலில் இன்றே தொடங்கி விடுங்கள்.   மன அமைதியை ஒருபோதும் இழக்காதீர்கள். பணியில் முழுமனதோடு ஈடுபடுவதுநிம்மதிக்கான வழி. வெற்றி, தோல்வி பற்றிய கவலை வேண்டாம். ஆனால், முயற்சிப்பதை மட்டும் நிரந்தர குணமாகக் கொள்ளுங்கள்.  எப்போதும் ஏதாவதுநற்செயலில் ஈடுபடுங்கள்.மனதைக் கடவுளிடமும், கைகளை வேலையினிடத்தும் கொடுங்கள்.   மனதில் வைராக்கியம்,விவேகம் போன்றநற்குணங்களை வளர்த்துக் கொண்டால் ஆசை என்னும் நெருப்பு அணைந்து விடும்.எல்லோரையும் மதிப்புடன் நடத்துங்கள். பிறருடன்ஒன்றிணைந்து வாழுங்கள். இதனால் ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள்.பணியைக் கொண்டு உயர்வு, தாழ்வு பாராட்டாதீர்கள். நேர்மையுடன் செய்யும் எந்த வேலையும் புனிதமானதே. ஆசையற்றவனே உயர்ந்த மனிதன். அவனுடைய பாத துõளிகள் உலகையே புனிதப்படுத்தி விடும்.நல்ல ஒழுக்கம், மன அடக்கம், கருணை, இரக்கம், சேவை மனப்பான்மை போன்ற குணங்கள் நம்மை தெய்வீக நிலைக்கு உயர்த்த வல்லவை.எந்த நிலையிலும் வாய்மையை மட்டும் பேசுபவன் கடவுளுக்குஉரியவனாகத் திகழ்கிறான்.கடவுள் நினைப்பில் மட்டும் மனதைச் செலுத்தி, சுயநலம் இல்லாமல் அன்புடன் அனைவருக்கும் சேவை செய்து வாழ்பவன் கடவுளுக்கே சேவை செய்தவனாகிறான். மகான்களின் வாழ்க்கைவரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் ஆன்மிக நுõல்களை படித்து அவற்றை பின்பற்றமுயலுங்கள்.எண்ணம், பேச்சு, செயல் மூன்றிலும் துõய்மையைக் கடைபிடியுங்கள். அந்தரங்க எண்ணம் கூட பரிசுத்தமாக இருக்கட்டும். நேர்மையான வாழ்வே உலகம் முழுமைக்கும் ஆதாரமாக இருக்கிறது. அதனால், நேர்மை வழியில்வாழ்வு நடத்துங்கள். எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காதீர்கள். எப்போதும் அகிம்சையைக் கடைபிடியுங்கள். எல்லா நல்ல குணங்களுக்கும் அகிம்சையே ஆதாரமாக இருக்கிறது.பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது கூடாது. தீமை செய்தவனுக்கும் நல்லதையே எண்ணுங்கள்.பயன்தரத்தக்க  விஷயங்களில் மட்டும் ஈடுபடுங்கள். அதுவே ஊக்கத்தையும், உற்சாகத்தையும் நமக்கு அளிக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar