புதுச்சேரி; சிவசடையப்பர் சுவாமி கோவிலில், நேற்று மாலை, கார்த்திகை சோமவார பூஜை நடந்தது.பேட்டையன்சத்திரத்தில் உள்ள சிவசடையப்பர் சுவாமி கோவிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு, நேற்று மாலை 6:30 மணியளவில் ஸ்ரீருத்ர ஹோமம், 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவசடையப்பர் சுவாமி கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.