மதுரை : இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா மதுரையில் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற, சிறப்புக்குழு அமைக்க 2013 ல் ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை. டிச.,5 ல் மலை மீதுள்ள தீபத்துாணில், இந்து முன்னணியினர் கார்த்திகை தீபம் ஏற்றுவர். பா.ஜ.,மாநில துணைத் தலைவர் சுரேந்திரன் தலைமையில் கார்த்திகை தீப போராட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.