சிவகங்கை மாவட்டம், ஏரியூர் மலை மீது மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த மலையில் அபூர்வமான ஜோதி விருட்சம் எனும் அதிசய மரம் உள்ளது. இது வருடத்தில் சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டும் இரவில் பிரகாசமாக ஒளி வீசுகிறது. பல மருத்துவ குணங்கள் உடைய இந்த மரத்தினை யாரும் குறிப்பாகப் பெண்கள், தொடுவதில்லை.