Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவில் உண்டியல் ... கோதண்ட ராமர் கோவிலில் அனுமன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா: ஜனவரி 6ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 டிச
2014
12:12

தஞ்சாவூர்: திருவையாறில், சத்குரு தியாகராஜ சுவாமிகள், 168வது ஆராதனை மஹோத்ஸவம், வரும் ஜனவரி, 6ம் தேதி துவங்குகிறது,” என, தியாக பிரம்ம மஹோத்ஸவ சபை தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், சத்குரு தியாகராஜ சுவாமிகளின், 168வது ஆராதனை மஹோத்ஸவ விழா, ஜனவரி, 6ம் தேதி மாலை, 5:00 மணிக்கு துவங்குகிறது. இரவு, 7:00 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது.ஜனவரி, 7 மற்றும் 8ம் தேதிகளில், காலை, 9:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.ஜனவரி, 9ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, தியாக பிரம்ம மஹோத்ஸவ சபை சார்பில், சஹஸ்ர நாம அர்ச்சனையும், காலை, 9:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, இசை நிகழ்ச்சிகளும், இரவு, 11:00 மணிக்கு மேல் திவ்யநாமமும் நடத்தப்படுகின்றன.10ம் தேதி காலை, 6:00 மணிக்கு, உஞ்சவிருத்தி பஜனையும், காலை, 8:30 மணிக்கு நாதஸ்வர இசையும், 9:00 மணிக்கு ஆராதனை மற்றும் பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் மகாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. காலை, 10:00 மணி முதல், இசை நிகழ்ச்சிகளும், இரவு, 7:30 மணிக்கு மல்லாரியுடன், சத்குரு தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலம் மற்றும் ஆஞ்சநேய உற்சவ மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இசை நிகழ்ச்சிகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். பந்தல் கால் நடவு: திருவையாறு, தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவுக்காக, நேற்று பந்தல் கால் நடப்பட்டது. விழாவின் போது, இசைக் கலைஞர்கள், பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர வசதியாக, தனித்தனியே மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட உள்ளன. பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா, நேற்று நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது செல்லும் பாதையில் பழநி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar