Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்! புத்துணர்வு முகாமில் லட்சுமி, பிரக்ருதி பங்கேற்பு! புத்துணர்வு முகாமில் லட்சுமி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவில் பாலாலயம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2014
11:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம், நேற்று முன்தினம் நடந்தது. இந்த கோவிலில், 75.40 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள், ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்க உள்ளன. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, வழக்கறுத்தீஸ்வரர் கோவில். இந்த கோவிலில், சோமவார பூஜையின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வழக்குகளில் இருந்து மீண்டு வர, அரசியல்வாதிகள் உட்பட பலரும் சிறப்பு பூஜை செய்வது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வர, அக்கட்சியினர் சிறப்பு யாகம் செய்தனர். அவரது தோழி சசிகலா இக்கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்துவிட்டு சென்றார். இந்த கோவிலில் ராஜ கோபுரம் இல்லை. பிரம்மோற்சவம் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் கோவிலை சீரமைத்து, திருப்பணி முடிந்த பிறகு மீண்டும் பிரம்மோற்சவம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, மூலவர் சன்னிதானம் தவிர, நவகிரகம், கொடிமரம், அன்னதான கூடம், தெப்பக்குளம், சுற்றுச்சுவர் போன்ற பணிகளுக்கான பாலாலயம், நேற்று முன்தினம் காலை நடந்தது. 36 லட்சம் ரூபாயில், மூன்று நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட உள்ளது. அதோடு, 18.60 லட்சம் ரூபாயில் புதிய முன் மண்டபமும், 14.40 லட்சம் ரூபாயில் அன்னதான கூடமும், 6.40 லட்சம் ரூபாயில் சுற்றுப்பிரகார மும் சீரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதை தவிர, நன்கொடையாளர்கள் நிதியில் இருந்தும் சில பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ”ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டடப்பணி துவங்கும். ஆறு மாதங்களில் பணிகளை முடிக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுஉள்ளனர். அதன் பின், மூலவர் விமான சீரமைப்பு பணி நடக்கும். அதுவரை வழக்கம் போல் வழிபாடு நடக்கும்,” என, கோவில் செயல் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது. சகல தேவதைகளும் சிவசந்நிதியில் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிகதுவாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் விளாச்சேரியில், தென் திருப்பதி என போற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar