Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் ... கோரக்கர் சித்தர் பீடத்தில் ஜனன மகா உற்சவம்! கோரக்கர் சித்தர் பீடத்தில் ஜனன மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் கோபுரங்களில் வளர்ந்த செடிகளை அழிக்கும் புனிதப்பணி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 டிச
2014
11:12

கீழக்கரை: கோயில் கோபுரங்களில் வளரும் செடிகளை ’ஆசிட்’ ஊற்றி அழிக்கும் பணியில் நெல்லையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோயிலில் உற்சவருக்கு சீர்பாத தூக்கியாக, கடந்த 26 வருடங்களாக பணிபுரிந்தவர் சங்கரன், 55. தற்போது, கோயில் கோபுரங்களின் மீது வளரும் செடிகளை அகற்றி வருகிறார். உத்திர கோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலின் ஏழு நிலைகளிலும் வளர்ந்துள்ள செடிகளை அகற்றினார்.

அவர் கூறியதாவது: ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். இதுவரை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், திருக்கழுக்குன்றம் சக்திபுரீஸ்வரர், தென்காசி காசிவிஸ்வநாதர், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், திருநெல்வேலி நெல்லையப்பர், திருவிடை மருதூர் நாறும் பூநாதர் உள்ளிட்ட சிவாலயங்களின் கோபுர உச்சியில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றி உள்ளேன். பறவைகள் உண்ட பழங்களின் மிச்சம் மற்றும் எச்சங்களால், சரியான சீதோஷ்ண நிலை உருவாகும்போது கோபுரங்களில் செடிகள் வளர்ந்து விடும். தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கோபுரக்கலசம் வரை சென்று, இதற்கென விசேஷமாக தயாரிக்கப்பட்ட ’ஆசிட்’டை செடியின் மீது ஊசி மூலம் செலுத்தி விடுவேன்.

இரு நாட்களில் செடிகள் பட்டுப்போய் விழுந்து விடும். ஒருமுறை திருக்கழுக்குன்றம் கோபுர உச்சியில் பணிசெய்தபோது, என்னை பருந்து விரட்டியது. தென்காசியில் குரங்கு கடித்தது, காஞ்சிபுரத்தில் தேனீக்கள் தாக்கி முகம், கை, கால்கள் வீங்கின. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் கடந்த 4 ஆண்டுகளில் திருவாடானை, தேவிபட்டினம், நயினார்கோவிலில் கோபுரச் செடிகளை அகற்றியுள்ளேன். மூளை வளர்ச்சியற்ற என் மகனை சிவனாக கருதி பராமரித்து வருகிறேன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த் திருவிழாவில் நேற்று கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar