மதுரை : மதுரை தானம் அறக்கட்டளை சார்பில், கோரிப்பாளையம் தர்காவிற்கு பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. தொல்லியல் நிபுணர் வேதாசலம் பேசியதாவது: கோரிப்பாளையம் தர்காவில் கி.பி.1573ம் ஆண்டைச் சேர்ந்த கோவில் திருச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ள வீரப்பன் நாயக்கன் கல்வெட்டு மூலமாக பாண்டியர்கள் இப்பள்ளிவாசலுக்காக பல்வேறு கிராமங்களை தானமாக வழங்கியதை அறியமுடிகிறது. கோரிப்பாளையம் தில்லி ஒரு கோல் சுல்தான் பள்ளிவாசல் கோரி என்று இக்கல்வெட்டில் குறிக்கப்படும் கோரிக்குரிய எல்லையை வகுத்து, சொரிகுடி, சொக்கிகுளம், பீவிகுளம், கன்னாநேந்தல், சிறுதுார் மற்றும் திருப்பாலை முதலிய கிராமங்கள் முன்னர் பாண்டியர் வழங்கிய போது தாமும் அளித்து ஆணை வழங்கியதாக வீரப்பநாயக்கன் கல்வெட்டு கூறுகிறது.இங்கு இந்துக்களும் பல வேண்டுதலுக்காக வந்து செல்கின்றனர். சமய நல்லிணக்கத்தில் நம் முன்னோருக்கு இருந்த அக்கறையை இது வெளிக்காட்டுகிறது, என்றார்.வரலாற்று பேராசிரியர் வெங்கட்ராமன், தர்காவின் பரம்பரை ஹக்தரான சையது, தானம் சுற்றுலா அணி தலைவர் பாரதி உட்பட பலர் பேசினர்.