Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோரிப்பாளையம் தர்காவிற்கு ... சரவண பொய்கை குளம் சீரமைப்பு துவக்கம்! சரவண பொய்கை குளம் சீரமைப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாவை தந்த பாவலர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 டிச
2014
03:12

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளியது திருவெம்பாவை; ஆண்டாள் ஸ்ரீவல்லிபுத்தூரில் அருளியது திருப்பாவை. திருவெம்பாவையில் 20 செஞ்சொற்சித்திரங்களும், திருப்பாவையில் 30 செஞ்சொற் சித்திரங்களும் ஒளிர்கின்றன. மாணிக்கவாசகர் திருவாதவூர் தந்த அருட்செல்வர்; பாண்டிய நாட்டு அமைச்சராகப் பணியாற்றியவர். ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் தந்த அருட்செல்வி; விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வாரால் நந்தவனத் துளசிச் செடியருகே காணப்பட்ட அற்புதக் குழந்தை.

மன்னருக்காக குதிரைகள் வாங்கச் சென்று, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவருள் பெற்றார் மாணிக்கவாசகர். குதிரைக்குரிய பணத்தில் அறச்செயல் புரிந்து அரசுப் பணியில் பிழைபட்டார். கோதையோ கடவுளுக்கான மாலையைத் தானே சூடி அழகு பார்த்தபின் கோயிலுக்குத் தந்து சமயாச்சாரத்தில் பிழைப்பட்டாள். மணிவாசகரை சிவபிரான் ஆட்கொண்டார்; சூடிக் கொடுத்த நாச்சியாரைப் பெருமாள் ஆட்கொண்டார். இருவருமே இறைஒளியில் கலந்தபெருமையினர்; மேலும் இறை ஒளியைத் தம்தம் அழகிய பாடல்கள் வழங்கிய அற்புதமான திவ்ய ஞானதீபங்கள்.

திருவாசகத்தின் அங்கமாகப் பன்னிரு திருமுறையில் குடியேறியது திருவெம்பாவை; நாச்சியார் திருமொழியுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் குடியேறியது திருப்பாவை. பன்னிரு திருமுறையும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் தமிழகத்தின் ஆன்மிகப் பண்பாட்டு விழிகள். பாவைப் பாட்டுகளோ அந்த இரு விழிகளை பாவைகளாக ஒளிர்பவை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar