பதிவு செய்த நாள்
17
டிச
2014
02:12
ராஜபாளையம் : மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு ராஜபாளையம் சஞ்சீவிமலை படிக்கட்டுகளில் படி பூஜை நடந்தது. பக்தர்கள் படியில் சூடம் ஏற்றி பூக்களை வைத்து வழிபட்டனர். மலைமேல் உள்ள குமாரசுவாமி கோயில் வளாகத்தில், வேலுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. கோயிலில் விநாயகர், குமாரசுவாமி, காளி, மகாலட்சுமி, ஆஞ்சநேயர், கிருஷ்ணன் சன்னிதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணமூர்த்தி, சரவணன், மடசாமி ராஜா, முத்துராமலிங்கம், மணிகண்டன், சுகுமாறன் பக்தி பாடல்கள் பாடினர். மதியம் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை துரைய ராஜா மற்றும் விழாகுழுவினர் செய்தனர்.