திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில், மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு, கோவில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.