அவிநாசி : அவிநாசி ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. சீதாதேவி தாயார், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீலட்சுமணர் ஆகியோருடன் பக்தர்களுக்கு, ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். கோத்தகிரி அரையட்டி அருணாச்சல மஹிமா தத்வன சைதன்ய சுவாமிஜி மற்றும் அவரது குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் வெற்றிச் செல்வன், தக்கார் ஆனந்த் மற்றும் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்தர் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.