பதிவு செய்த நாள்
29
டிச
2014
01:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட பெருமாள் கோவில், அஷ்டபுஜ பெருமாள் கோவில் பகுதிகளில், 10 கேமராக்கள் பொறுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
காஞ்சிபுரத்தில், கோவில் திருவிழா மற்றும் விஷேச காலங்களில், பெண்களிடம் சங்கிலி திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. நகரில் கூட்ட நெரிசல், குற்றங்களை கண்காணிக்க, நகரில் சில முக்கிய சாலைகளில், சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டு உள்ளன. வரும் 1ம் தேதி, வைகுண்ட ஏகாதசி அன்று, கோவில்களில் காலை முதல் மாலை வரை, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த வேளைகளில், திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள் என்பதால், போலீசார்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வைகுண்ட பெருமாள் மற்றும் அஷ்டபுஜ பெருமாள் ஆகிய இரு கோவில்களை சுற்றிலும், 10 கேமராக்களை பொறுத்த திட்டமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், வரும் 1ம் தேதி,
புத்தாண்டும், வைகுண்ட ஏகாதசி விழாவும், ஒன்றாக வருவதால், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கோவிலுக்கு வரும் பெண்களிடம் நகை திருடு போகாமல் தடுக்கும் வகையில், கண்காணிக்க முக்கிய இடங்களில், 10 கேமராக்கள் பொறுத்தப்படும், என்றார்.