Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வைகுண்ட ஏகாதசி: திருப்பதிக்கு 2 டன் ... கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி: 60 ஆயிரம் லட்டு தயார் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முனியப்பன் கோவில் திருவிழா: பக்தர்கள் நேர்த்தி கடன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 டிச
2014
12:12

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் திருவிழாவில், 4,000க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனுக்காக, பலியிட்டனர். தர்மபுரி மாவட்டம், பி.அக்ரஹாரத்தில், பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், மார்கழி மாத மத்தியில், முனியப்பனுக்கு விழா எடுக்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், சேலம் மாவட்டம் மேட்டூர், மேச்சேரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்குள்ள முனியப்பனை வழிபாடு செய்து வருகின்றனர். தங்களது நேர்த்தி கடனுக்காக, முனியப்பனுக்கு ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலியிடுகின்றனர்.முனியப்பன் கோவில் வருடாந்திர திருவிழா நேற்று தொடங்கியது. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக, வழக்கமான நேரத்தை விட சற்று தாமதமாக, முனியப்பன் கோவிலுக்கு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள், பைக்குகள் மூலம் பக்தர்கள் வந்தனர். காலை 10 மணியில் இருந்து, பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, பி.அக்ரஹாரம் பஸ்ஸ்டாப்பில் இருந்து கோவில் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முனியப்பனை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர். மதியம் 2 மணி வரை, 2,300 ஆடுகள் மற்றும் 1,700 கோழிகளுக்கு மேல், பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனுக்காக, முனியப்பனுக்கு, பலியிட்டனர்.முனியப்பன் கோவில் திருவிழாவின், இரண்டாவது மற்றும் இறுதி நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதிகளவில் ஆடு, கோழிகளை பலியிடுவர் என்று, விழாக்குழுவினர் தெரிவித்தனர். விழாவை முன்னிட்டு, போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar