Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கும்மிடிப்பூண்டி பெருமாள் கோவிலில் ... அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
140 ஆண்டுகளுக்கு முன் மாயமான அம்மன் சிலை மீட்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2015
12:01

வேலூர்:கடந்த, 140 ஆண்டுகளுக்கு முன் மாயமான அம்மன் சிலை, ஏரியில் இருந்து மீட்கப்பட்டது.வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 160 ஆண்டுகள் பழமையான, சாமூண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.இங்கு, 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து, பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடத்துவது வழக்கம். திருவிழா முடிந்ததும், அம்மன் சிலையை கோவிலில் உள்ள ஒரு அறையில், பாதுகாப்பாக வைத்திருப்பர். 140 ஆண்டுகளுக்கு முன், அம்மன் சிலை ஒன்று மாயமானது.அப்போதைய கோவில் பூசாரி முல்லை வேந்தன், அப்போதைய சப் - கலெக்டராக இருந்த ஜான் வின்சன் பாலிடம், இதுகுறித்து புகார் செய்தார். இந்த விஷயம், கோவில் மானிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.நேற்று, பெரியாங்குப்பம் ஏரிக்கரையில், தேசிய ஊரக வேலை திட்டத்தில், 50 பெண்கள் பணியாற்றி வந்தனர். அப்போது சரஸ்வதி என்ற பெண், ஏரியில் மண் வெட்டிய போது, வித்தியாசமான சத்தம் கேட்டது. இதையடுத்து, அங்கிருந்த பெண்கள், அந்த இடத்தை தோண்டிய போது, கல்லிலான அம்மன் சிலை ஒன்று இருந்தது தெரியவந்தது.தகவல் அறிந்த சாமூண்டீஸ்வரி கோவில் பூஜாரி சடையாண்டி, 140 ஆண்டுக்கு முன் கோவிலில் திருடுபோன அம்மன் சிலை இதுதான் என அடையாளம் காண்பித்தார்.இதையடுத்து, அந்த சிலையை, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் அருகில் உள்ள ஆல மரத்தின் கீழ் வைத்து வழிபட்டனர். ஆம்பூர் தாசில்தார் சரஸ்வதி, சிலையை கைப்பற்றினர்.அதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ""பூமிக்குள் கிடைக்கும் சிலைகள், புதையல் அரசாங்கத்தின் சொத்து. உங்களுக்கு உரிமை கிடையாது. இந்த கோவிலுக்கு சொந்தமான சிலை என்பதை நிரூபித்து விட்டு சிலையை எடுத்துச் செல்லலாம், என்று, தாசில்தார் சரஸ்வதி கூறினார்.பின்னர், சிலையை ஆய்வுக்காக தொல் பொருள் ஆய்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar