Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறப்பு! கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொர்க்க வாசல் திறப்பு:ரத்தின அங்கியுடன் சேவை ஸாதித்த நம்பெருமாள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2015
10:01

திருச்சி:வருண பகவான் வரவேற்க, பக்தர்களின் ரங்கா ரங்கா கோஷத்துக்கிடையே, ரத்தின அங்கி அலங்காரத்தில் நம்பெருமாள், சொர்க்க வாசலை கடந்து, ஆயிரங்கால் மண்டபத்திற்கு சென்று, பக்தர்களுக்கு சேவை ஸாதித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள், 16 மணி நேரம் வரை காத்திருந்து, நம்பெருமாளை தரிசித்து சென்றனர்.

Default Image
Next News

பூலோகத்தில், 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் ரங்கம் ரங்கநாதர் கோவிலில், மார்கழி மாதத்தில், 20 நாள் நடக்கும், வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது.வைகுண்ட ஏகாதசி விழாவின், பகல் பத்து உற்சவம் கடந்த மாதம், 22ம் தேதி துவங்கியது. பகல் பத்தின் நிறைவு நாளான நேற்று அதிகாலை, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாளை தரிசனம் செய்ய, நேற்று முன்தினம் மதியம் முதலே, ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் குவியத் துவங்கினர்.

அதிகாலை, 2 மணி முதல், மூலஸ்தானத்தில் ரத்தின அங்கி அலங்காரத்தில் இருந்த நம்பெருமாளுக்கு, ஸ்ரீரங்கம் ஜீயர், பட்டாச்சாரியர்கள், ஆகமவிதிகளின் படி, பூஜைகளை மேற்கொண்டனர். அதிகாலை, 3.45 மணிக்கு விருச்சிக லக்னத்தில், நம்பெருமாள் மூலஸ்தானத்தல் இருந்து புறப்பட்டார்.

நாழிக்கொட்டான் வாசல், பிரகாரத்தை வலம் வந்து, பிரஜாநதியில் வேத வின்னலை பெற்று, 4.45 மணிக்கு, சொர்க்க வாசல் அருகே வந்தார். சரியாக, 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் ரங்கா ரங்கா கோஷங்கள் முழங்க, நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து, ஆயிரங்கால் மண்டபத்துக்கு சென்றார்.

அதிகாலை, 5.15 மணிக்கு, திருக்கொட்டகை பிரவேசம், பின்னர் அங்கிருந்து காலை, 6.30 சாதரா மரியாதையும் பெற்று, காலை, 7.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தை அடைந்தார். நேற்று இரவு, 12 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள், திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை, 1.15 மணிக்கு, மூலஸ்தானத்தை அடைந்தார்.அதிகாலை, 4 மணி முதல், இரவு மீண்டும் மூலஸ்தானதுக்கு சுவாமி புறப்பட்டு செல்லும் வரை,

பல லட்சம் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள், 16 மணி நேரம் வரை காத்திருந்து, நம்பெருமாளை தரிசித்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar