Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி சிவன் கோவில்களில் பிரதோஷ ... ஆஞ்சநேயர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆஞ்சநேயர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் பரமபத வாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜன
2015
11:01

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்றுமுன் தினம் நள்ளிரவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு, இரவுப் பத்து உற்சவம் துவங்கியது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிச.21 ல் பகல் பத்து உற்சவம் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை,பின்னர் கோயில் கால பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு சவுமியநாராயணப்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் பெருமாள் தரிசனம் செய்தனர்.இரவு 9 மணிக்கு பெருமாள் ராஜாங்க திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து, இரவு 11 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் தாயார், ஆண்டாள் சன்னதிகளில் எழுந்தருளி தேவியர்களுக்கு அருள்பாலித்தார்.நள்ளிரவு 12.10 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலைக்கடந்து நம்மாழ்வாருக்கு பெருமாள் காட்சியளித்தார். அடுத்து ஏகாதசி மண்டபத்தில் பர்த்தி உலாத்துதல் நடந்தது. திரளாக பக்தர்கள் கூடி பரமபத வாசல் திறப்பை தரிசித்தனர். தொடர்ந்து பெருமாள் தாயார் சன்னதிஎழுந்தருளி சிறப்பு பூஜை,ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு பத்து உற்சவம் துவங்கியது.நேற்று முதல், தினசரி இரவு 7 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படும். ஜன.,8ல் திருமங்கையாழ்வாருக்கு காட்சி அளித்தல், திருவீதி உலா நடைபெறும். ஜன.,10ல் காலை 10 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, நம்மாழ் வார் திருவடி தொழுதல் நடைபெறும். ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar