பதிவு செய்த நாள்
03
ஜன
2015
11:01
செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரை வழிபட்டனர். கிரிசங்கர் குருக்கள் பூஜைகளை செய்தார். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். நந்திஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சாமி வீதி உலாவும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகமும் செய்தனர். திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சுவாமி கோவில் உலா நடந்தது. உபயதாரர் சம்பத், சீதா, நிர்வாக குழுவினர் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி உட்பட கலந்து கொண்டனர். அர்ச்சகர் செல்வம் பூஜைகளை செய்தார். தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார். மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ்வரர் குடைவரை கோவிலில் மத்தளேஸ்வரர், பிரகன்நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார்.