பதிவு செய்த நாள்
27
ஜன
2015
12:01
காங்கயம் : சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவில், நாளை கொடியேற்றம் நடக்கிறது; தேர்வடம் பிடித்தல், வரும் 3ல் துவங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது. காங்கயம் அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த 25ல் துவங்கியது. தொடர்ந்து, வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றம், திருஉலா காட்சி நடந்தன. இன்று மாலை 4:00க்கு, வீரகாளியம்மன் தேர்த்திருவிழா மற்றும் கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.நாளை காலை 6:00க்கு, வீரகாளியம்மன் மலைக்கோவி லுக்கு எழுந்தருளல், பகல் 11:00க்கு மயில் வாகன அபிஷே கம், திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. மதியம் 2:00க்கு, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.வரும் 29 முதல், பிப்., 1 வரை, தினமும் காலசாந்தி மற்றும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கும். பிப்., 2 காலை 10:00க்கு, மைசூர் பல்லக்கில் சுவாமி எழுந்தருளல், அபிஷேகம், மகா தீபாராதனை; இரவு 7:00க்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. வரும் 3 அதிகாலை 4:00க்கு மகா அபிஷேகம், 6:00க்கு ரதத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. மாலை 4:00க்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. திருத்தேர் வலம், 4 மற்றும் 5ம் தேதியென 3 நாட்கள் நடைபெறுகிறது.வரும் 6, 7ம் தேதி காலை 9:00 மணி முதல், கட்டளைதாரர்கள் காலசந்தி, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 8ம் தேதி பகல் 11:00க்கு, பரிவேட்டை, தெப்ப உற்சவம், கோவில் நந்தவன தோட்டத்தில் நடக்கிறது. 9ம் தேதி பகல் 12:00க்கு சிறப்பு பூஜை, மகா தரிசனம் நடக்கிறது. பிப்., 10 காலை 9:00க்கு காலசந்தி, பகல் 12:00க்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 11ம் தேதி, காலசாந்தி, மண்டப கட்டளை பூஜைகள் நடக்கின்றன. 12ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி மலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மலைக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது