Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

குரும்பபாளையம் சக்தி மாரியம்மன் ... பிரதோஷ வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2015
03:02

உடுமலை : உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடக்கிறது.
உடுமலை, தில்லை நகரில் அமைந்துள்ளது, ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில். கோவில் கும்பாபிஷேகம் விழா, கடந்த ஜன., 30ல் துவங்கியது.

31ம் தேதி காலை முதல் காப்பணிவித்தல் உள்ளிட்ட வழிபாடுகளும், மாலை, 6:30 மணிக்கு
முதற்கால வேள்வியும் நடந்தன. நேற்று காலை, 9:30 மணிக்கு, இரண்டாம்கால வேள்வியும், 10:30 மணிக்கு, விமான கலசம் நிறுவுதலும், மாலை, 5:30 மணிக்கு, மூன்றாம் கால வேள்வியும் நடந்தன.இன்று காலை, 5:30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மூலமூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தலும், காலை 6:00 மணிக்கு, சண்டேச நாயனார், பைரவர், நந்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

காலை, 7:00 மணிக்கு ரத்தினலிங்கேஸ்வரருக்கு நான்காம் கால வேள்வியும், காலை, 9:00 மணிக்கு, திருக்குடங்கள் புறப்பாடும், 9:30 மணிக்கு, விமானங்களுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, அருளாளர்கள் அருளுரையும், 11:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், 11:30 மணிக்கு, பேரொளி வழிபாடும், மாலை, 5:00 மணிக்கு, சுவாமி திருவீதியுலாவும், இரவு, 7:00 மணிக்கு, பள்ளி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது.

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது.

பொள்ளாச்சி பாலக்காடு ரோடு வடுகபாளையத்தில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில். இக்கோவிலில் இன்று காலை 4:30 மணி முதல் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது.

இதற்காக கடந்த மாதம் 31ம் தேதி முதல் யாகபூஜைகள் நடந்து வருகின்றன. இன்று காலை 4:30 மணி முதல் நான்காம் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, விநாயகர், வள்ளி, முருகன், தெய்வானை, நவகிரகம், அண்ணாமலையார் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையடுத்து, 6:45 மணிக்கு யாக சாலையில் இருந்து அபிஷேகம் குடம் புறப்படுகிறது. தொடர்நது 7:15 மணிக்கு பாலகணபதி, அங்காளம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்நடைபெறும்.

அடுத்த 8:00 மணிக்கு தச தானம், தச தரிசனம், மகா அபிஷேகமும், 9:00 மணிக்கு அன்னதானமும் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar