Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகா சண்டி யாகம்! செஞ்சி பகுதியில் பிரதோஷ வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவில் நாளை தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2015
03:02

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவில், தேரோட்டம் நாளை காலை நடக்கிறது.அருணகிரி நாதரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற முருகன் திருதலம் சென்னிமலை. இங்கு தைப்பூச விழா ஆண்டு தோறும், 15 நாட்கள் விமர்சையாக நடக்கும். இந்தாண்டு விழா, கடந்த ஜனவரி, 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அது முதல் தினமும், முருகப்பெருமான் பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகனக்காட்சி, காமதேனு வாகன காட்சி, கைலயங்கிரி வாகன காட்சி என, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.இன்று, மாலை ஆறு மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமார ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 8 மணிக்கு வசந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை (3ம் தேதி) அதிகாலை, 3 மணிக்கு ஸ்வாமிக்கு மகா அபிஷேகமும், காலை, 7 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.

தேரோட்டத்தை சுற்றுச்சுழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், வனத்துறை அமைச்சர் ஆனந்தன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ், கலெக்டர் பிரபாகர் உட்பட பலர் துவக்கி வைக்கின்றனர்.

புதன் கிழமை மாலை, தேர்நிலை வந்து சேருகிறது.வரும், 5ம் தேதி பரிவேட்டை குதிரை வாகன காட்சியும், 6ம் தேதி வெள்ளி கிழமை தெப்போற்சவம், பூதவாகன காட்சியும் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மகாதரிசனம், 7ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 9 மணிக்கு வள்ளி, தெய்வனை சமேத முத்துக்குமாரஸ்வாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு மகாதரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், நடராஜபெருமானும், சுப்பிரமணிய ஸ்வாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா காட்சி நடைபெறுகிறது.அன்று சென்னிமலை முருகனை தரிசிக்க ஆயிரக்காணக்கான பக்தர்கள் திரள்வார்கள். 8ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar