பண்ணைக்காடு : பண்ணைக்காடு கள்ளழகர் சவுந்திரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் கணபதி பூஜை, மஹா சுதர்சன ஹோமம், அங்குரார்ப்பணம், கும்ப பூஜை, பூர்ணாகுதி, மஹா தீபாரதனை மற்றும் நான்கு கால பூஜைகளுடன் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது.