பதிவு செய்த நாள்
03
பிப்
2015
03:02
பழநி : பழநி கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் "விடலை உடைத்து வழிபாடு செய்ய
தேங்காய் வாங்குவதால், அதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பூஜை பொருட்கள் அடங்கிய தட்டு விலை ரூ.150 வரை விற்கின்றனர்.
பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மலைக்கோயிலில் 3 மணிமுதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.அதிகரிப்பு: பாதயாத்திரை வரும் பக்தர்கள் கிரிவீதியை வலம் வரும் போது அப்பகுதிகளில் உள்ள கோயில்களிலும், பாதவிநாயகர் கோயிலிலும் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தின் நுழைவுப்பகுதியிலும் விடலைத் தேங்காய் (சிதறுகாய்) உடைத்துவழிபடுகின்றனர்.
இதன் காரணமாக தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளது.இதனால் வெளிமார்க்கெட்டில் ரூ.8 முதல் 20 வரை விற்கப்படும் தேங்காயை ரூ.15 முதல் ரூ.30 வரை விற்கின்றனர். வாழைப்பழம், தேங்காய், பூ, பத்தி, சூடம்,வெற்றிலை, பாக்கு, விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அர்ச்னை தட்டு விலை ரூ.80 முதல் 150 வரை விற்கின்றனர்.
காரைக்குடி பக்தர் முகுந்தன் கூறுகையில்," 10பேர் கொண்ட குழுவாக பழநிக்கு நடந்து வந்தோம். பாதவிநாயகர்கோயில் உட்பட அனைத்து கோயிலிலும் விடலை உடைத்து வழிபடுவது வழக்கம். ஒரு தேங்காய் ரூ.20 என்கிறார்கள். அனைத்து கோயில்களிலும் விடலை உடைக்கலாம் என நினைத்தோம்.
விலை உயர்வு காரணமாக பாதவிநாயகர் கோயில், வெளிப் பிரகாரத்தில் மட்டும் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தோம், என்றார்.