பதிவு செய்த நாள்
04
பிப்
2015
02:02
செஞ்சி: தையூர் செல்வவிநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.செஞ்சி தாலுகா தையூர் கிராமத்தில் செல்வவிநாயகர், பக்த ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்து திருக்குட நன்நீராட்டு விழா 2ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 31ம் தேதி மாலை 5 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடும், 7.30 மணிக்கு முதல் கால வேள்வி நடந்தது. 1ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வியும், இரவு 9.30 மணிக்கு மருந்து சாற்றுதலும் நடந்தது.
2ம் தேதி காலை 7 மணிக்கு நான்காம் கால வேள்வியும், 8.30 மணிக்கு வேள்வி நிறைவும், 9.15 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் தலைமையில் விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டும், 9.30 மணிக்கு செல்வ விநாயகர், பக்த ஆஞ்சநேயருக்கு திருக்குட நன்னீராட்டும் நடந்தது. சென்னை கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் விஸ்வநாதன் பங்கேற்றார். ஆசிரியர் பல்கலைக் கழக வழக்கறிஞர் வெங்கடேசன், ஊராட்சி தலைவர் முனியம்மாள் உலகநாதன், முன்னாள் தலைவர் தென்னரசு, துணை தலைவர் சரவணன் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர்.