பதிவு செய்த நாள்
04
பிப்
2015
02:02
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் கோட்டத்தில் தைப்பூச அன்னதான விழா நடந்தது. விழாவையொட்டி காலை அகவல் பாராயணம் நடந்தது. சன்மார்க்க ஊர்வலத்தை மன்ற தலைவர் பால்ராஜ் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் வைத்திலிங்கம், நாராயணன், பாலசுப்ரமணியன், மன்ற பொருளாளர் முத்துகருப்பன் , ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, சுதாகரன் முன்னிலை வகித்தனர்.
பின்னர் பகல் 11.45 மணிக்கு சிறப்பு ஜோதி தரிசனம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அன்னதானம் வழங்குதலை தொடங்கி வைத்தார். டாக்டர் நாச்சியப்பன், அரிமா மாவட்ட தலைவர்கள்வேலு, ஜனனி, டவுன் அரிமா சங்க தலைவர் விஜயகுமார்,ரோட்டரி தலைவர் சாப்ஜான், வரதராஜன், வக்கீல் சங்க தலைவர் தாமரைசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அரசம்பட்டு: அரசம்பட்டு வள்ளலார் அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மதிவாணன் தலைமை தாங்கி அன்னதானம் வழங்கினார். பெரியசாமி, அண்ணாதுரை, மணிமாறன், குமணன், கருணாநிதி, பரிமளம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செல்லம்பட்டு: செல்லம்பட்டு கிராமத்தில் வள்ளலார் அறப்பணி மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் பழனிசாமி, அமைப்பாளர் தலைமை ஆசிரியர் லட்சுமிபதி முன்னிலை வகித்தனர். ரங்கன் அன்னதானம் வழங்குதலை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் கதிரவன், பரிதி, சங்கர், பரிமளம், உண்ணாமலை, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.