விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றிம் பனையபுரம் செம்பட விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் செம்பட விநாயகர் கோவில் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி 4ம் தேதி யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று முன் தினம் காலை 9.30 மணிக்கு கூனிச்சம்பட்டு ராம சுப்பிரமணிய அய்யர் குழுவினரால் மூன்று கால யாக பூஜைகள் முடிந்து மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சாமிகள் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றினார். ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் மீனாட்சி ஆறுமுகம், கல்யாணி டிரான்ஸ்போர்ட் நிறுவனர் சுப்பிரமணி, நிர்வாகி வழக்கறிஞர் கபிலன், ஆனந்தம் டிரஸ்ட் இயக்குனர் கணேசன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் காமாட்சி சிவராமன்,ஜோதிராஜா, கருணாகரன், தேவநாதன், துணைத்தலைவர் சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, தியாகராஜன், ரங்கநாதன், ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி உட்பட பலர் செய்திருந்தனர்.