பதிவு செய்த நாள்
07
பிப்
2015
11:02
விழுப்புரம்: விழுப்புரம் ரங்கநாதன் வீதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் நாளை (8ம் தேதி) கும்பாபிஷேக ஆண்டு விழா நடக்கிறது. விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், விநாயகருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு மகாலட்சுமி குத்துவிளக்கு பூஜை, தீபாராதனை நடந்தது.
இன்று மாலை 6:00 மணிக்கு கலசம், 108 சங்கு பூஜைகள், யாக ஹாமம், முதல் கால பூர்ணாஹூதி நடக்கிறது.நாளை 8ம் தேதி காலை 9:00 மணிக்கு சித்தி விநாயகர், பாலசுப்ரமணியர், கனகதுர்க்கையம்மை, துர்க்கை லட்சுமி, சரஸ்வதி, தட்சணாமூர்த்தி, மணிகண்ட அய்யப்பன், நவக்கிரகம், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு பஞ்சமுகார்ச்சனை, 7:00 மணிக்கு உற்சவ விநாயகர் ஆலய பிரவேச உற்சவம் நடக்கிறது.