திருப்பதி:திருமலையில் ஏழுமலையானை தரிசித்த பின், கோவில் எதிரில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருக்கும் அகண்டத்தில், பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி காண்பிப்பது வழக்கம்.
இதற்கு தேவையான தேங்காய்களை, தேவஸ்தான கடைகளில் மட்டுமே பக்தர்கள் பெற முடியும். அகண்டம் அருகில் உள்ள தேங்காய் கடைகளில், தேங்காய் இல்லை என, பலகை வைக்கப்பட்டுள்ளது. வார விடுமுறையான நேற்று, பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. இதனால், தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்கள், தேங்காய் உடைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல், மன வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.