தொண்டி : தொண்டி அருகே நாவலூர் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. பின்னர், காலை 9 மணிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.