பதிவு செய்த நாள்
10
பிப்
2015
12:02
புதுச்சேரி: திலாசுப்பேட்டை, தருமராசா பாஞ்சாலியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
திலாசுப்பேட்டையில் தருமராசா பாஞ்சாலியம்மன், வலம்புரி முத்து விநாயகர், முத்து மாரியம்மன், நாகலிங்கேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி காலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமங்களுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை 9.15 மணிக்கு, வலம்புரி முத்து விநாயகர், ராஜகோபுரம் மற்றும் பரிவார ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9.40 மணிக்கு, தருமராசா பாஞ்சாலியம்மன் கோவில் மூலவர் விமானம் மற்றும் கிருஷ்ணர் சன்னதிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் தியாகராஜன், ஜெயபால் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.