பதிவு செய்த நாள்
10
பிப்
2015
12:02
செஞ்சி: செஞ்சி அருகே உள்ள ஊரணித்தாங்கல் கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள பாலமுருகன், விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கடந்த 8ம் தேதி காலை 9 மணிக்கு அனுஞ்சை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, மகா ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. 9.30 மணிக்கு கடம் புறப்பாடும், தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் செண்பகப்பிரியா விஜயகுமார், ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை பண்ருட்டி இடம்புரி விநாயகர் ஆலய அர்ச்சகர் சேகர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்.