இந்த மாதம் பிப். 17 வரை சுக்கிரனும், மார்ச் 3 வரை புதனும் சாதமாக நின்று நற்பலன் தருவர். குரு , சனியாலும் நன்மையே நடக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில், மாதத் தொடக்கத்தில் சுபநிகழ்ச்சி இனிதே நடந்தேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். விருந்து விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள். மார்ச் 3க்கு பிறகு மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும் .உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பெண்களால் நன்மையும், மகிழ்ச்சியும் ஏற்படும். பயணத்தின் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி நீங்கும். பகைவர் கூட வலிய வந்து சரணடைவர். இதனால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மார்ச் 3க்கு பிறகு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சக பணியாளர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும்.
கலைஞர்கள் பெண்களால் நன்மை காண்பர்.
அரசியல்வாதிகள் சுமாரான பலனையே பெறுவர். அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழி காட்டுதல் பயனளிக்கும். மார்ச் 3க்கு பிறகு படிப்பில் கவனம் தேவை. பெற்றோர் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருவாய் பெறுவர். கால்நடை மூலம் அதிக லாபம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனம் கூடாது.
பெண்கள் அக்கம்பக்கத்தினருடன் கருத்துவேறுபாடு கொள்ள நேரிடும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.