செவ்வாய்,கேது ஆகியோரின் சாதகத்தால், புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். பொருளாதார வளம் கூடும். எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். அபார ஆற்றல் மிக்கவராக செயல்படுவீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கும் யோகமுண்டாகும். சுக்கிரன் பிப். 17 வரையும், புதன் மார்ச் 3 வரையும் நன்மை தருவார்கள். அநியாயமாக தண்டிக்கப்பட்டு விட்டோமே என நினைப்பவர்களுக்கு நியாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் தடைகளை முறியடித்து முன்னேற்றம் காண்பீர்கள். மார்ச் 3க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிப். 21, 22ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு சக பணியாளர் மத்தியில் செல்வாக்கு கூடும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் சிறப்பான நிலையை அடைவர். போட்டி, பந்தயத்தில் வெற்றி கிடைக்கும். மார்ச் 3க்கு பிறகு அக்கறையுடன் படிப்பது நல்லது.
விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலமான காலம். வழக்கு விவகாரத்தில் சாதகமாக முடிவு கிடைக்கலாம்.
பெண்கள் மாத தொடக்கத்தில் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். பிற்பகுதியில் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போகவும். அண்டை வீட்டாரிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பேச்சைக் குறைக்கவும்.
நல்ல நாள்: பிப். 15, 16, 21, 22, 23, 24, மார்ச் 2, 3, 4, 5, 6, 9, 10, 11, 14
கவன நாள்: பிப்ரவரி 25, 26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2, 3 நிறம்: பச்சை, சிவப்பு
வழிபாடு: சனிக்கிழமை சனீஸ்வரனை வழிபட்டு அர்ச்சனை செய்யுங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »