பதிவு செய்த நாள்
13
பிப்
2015
12:02
காரைக்குடி : ""நளசரித்திரத்தால் விலகும் சனி பிடித்த துன்பம் நம்மை விட்டு விலகும், என திருச்சி கல்யாணராமன் பேசினார்.
காரைக்குடியில் அவர் பேசியதாவது: நவக்கிரகத்தில் சனி நல்ல கிரகம். சனி ஒருவனை பிடித்தால் அவன் நிச்சயமாக கோயிலுக்கு வருவான். கடவுளே இல்லை என சொல்லக்
கூடியவனை உண்டு என்று சொல்ல வைக்க கூடிய கிரகம் சனி. நள மகாராஜாவை சனி பிடித்தது.
அவர் புஷ்கரனோடு சூதாடி தன்னையும் ராஜ்யத்தையும் இழந்தார். தமயந்தியுடன் கானகம் சென்று, அவளை பிரிந்து பின் சேர்ந்தார். நாராயணணுடைய நாமாவை, ஒருவன் சொல்லவில்லை என்றால், எப்படி கஷ்டம் வருமோ, அப்படி அவனுக்கு கஷ்டம் வந்தது. நாராயணன் நாமாவை சொன்னால் செல்வம், பொருள், மனைவி, குழந்தைகள் கிடைக்கும். அவர் நாமத்தை சொல்லாதவருக்கு துன்பம் வரும். அது போன்றே நளமகாராஜா துன்பம் அடைந்து, மீண்டும் சூதாடி வெற்றி பெற்றார். அப்போது சனி பகவான் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும், எனக்கேட்டார். நள சக்கரவர்த்தி, "தங்களால் ஏழரை ஆண்டு அஷ்டம சனி அல்லது சனி திசை என்று ஒருவருக்கு வரும்போது, என்னுடைய கதையை கேட்டால், அவர்களை ஒன்றும் செய்ய மாட்டேன், என வரம் கேட்டார். அவரும் வரம்
தந்தார். சனியின் துன்பத்தால் வருந்துவோர், நாராயணன் நாமாவை சொல்லி, நள சரித்திரம் கேட்டால் கஷ்டத்தில் இருந்து விடுபடலாம், என்றார்.