Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி ... ராமேஸ்வரம் கோயிலுக்கு கங்கை நீருடன் வந்த பக்தர்கள்! ராமேஸ்வரம் கோயிலுக்கு கங்கை நீருடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி கோலாகலம்; கோவில்களில் திரண்ட பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2015
12:02

கோவை : மகா சிவராத்திரியை முன்னிட்டு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில், சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

Default Image
Next News

ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரி தினம், மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், சிவபெருமானின் அருள் பெற வேண்டி, சிவன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.நேற்று, மகா சிவராத்திரி முன்னிட்டு, சிவன் கோவில்களில், மாலை முதலே, சிறப்பு வழிபாடுகள் துவங்கின. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு ஆறு கால பூஜை நடத்தப்பட்டது. காலை, 5:00 மணி முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இரவு, சுவாமிக்கு பஞ்சாமிருதம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு பூஜைகளில் பங்கேற்றனர்.

கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அலங்காரம் மேற்கொள்ளப்பட்டது. பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலிலும் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது.வெள்ளலுார் சிவகாமசுந்தரி சமேத தேனீஸ்வரர் கோவிலில், மாலை, 6:௦00 மணிக்கு, அபிஷேக வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், கலசாபிஷேகமும் நடந்தது.தொடர்ந்து, 8:00 முதல் அதிகாலை, 4:00 மணி வரை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, மேற்குறிப்பிட்ட திரவியங்களால், அபிஷேக வழிபாடு நடந்தது.இதையடுத்து, அமாவாசை வழிபாடு நடந்தது. அன்னுார், மூலக் குரும்பபாளையம், பத்ர காளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று இரவு விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு நடந்தது.

நாரணாபுரம் ஊராட்சி, வடுகபாளையம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று மாலை அம்மனுக்கு கொலு வைக்கப்பட்டது. விநாயகர் கோவிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள, வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகள் நடந்தன. முதல்கால சிவவழிபாட்டில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ராஜ அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இரவில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.காரமடை, லோகநாயகி அம்பாள் உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், மகாசிவராத்திரி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு ஐந்து கால சிறப்பு பூஜைகள் நடந்தன. சிவனுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து ஐந்துகால சிறப்பு பூஜைகள் நடந்தன. பெள்ளாதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில், மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
மதுரை;  கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மதுரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar