பதிவு செய்த நாள்
28
பிப்
2015
12:02
வில்லியனுார்: திருக்காஞ்சியில், மாசிமகம் தீர்த்தவாரி நடக்க உள்ள புதிய இடம் குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில், பிரசித்திப் பெற்ற, காமாட்சி, மீனாட்சி சமேத கெங்கவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பாலாலய விழா, கடந்த 23ம் தேதி நடந்தது. பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் மற்ற விழாக்கள் நடக்காமல், தீர்த்தவாரி மட்டும், வரும் 4ம் தேதி நடக்க உள்ளது. கோவில் திருப் பணி நடந்து வருவதால், பழைய இடத்தில் தீர்த்தவாரி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்குப் பின்புறம் உள்ள நிலத்தைச் சீரமைத்து, தீர்த்தவாரி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய இடத்தை, இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், நடராஜன் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.