மார்ச் 4 வைகுண்டர் பிறந்த தினம்: உள்ளூர் விடுமுறை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2015 12:02
திருநெல்வேலி: வரும் மார்ச் 4ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் பிறந்த தினத்தையொட்டி உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் மு.கருணாகரன், தெரிவித்துள்ளதாவது:கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு பகவான் வைகுண்டசாமியின் பிறந்தநாள் விழா வரும் மார்ச் 4ம் தேதி மாசி 20 புதன்கிழமை நடக்கிறது. இதையொட்டி புதன்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு மற்றும் நிறுவனங்களுக்கும் மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகின்றது.இந்நாளில் தேர்வுகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல. எனவே வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் முக்கிய தேர்வுகள் நடைபெறும் எனவும் திருநெல்வேலி மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக்கருவூலங்களும் குறைந்த பட்ச பணியாளார்களைக் கொண்டு அரசு காப்புகள் தொடர்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.