Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முக்தி முனீஸ்வரர்கோவில் தேரோட்டம் குழந்தை இயேசு ஆலயத்தில் தமிழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் மகாமக குளத்தில் ஓராண்டுக்கு புனித நீராடலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2015
02:03

கும்பகோணம்: ""இளைய மகாமகம் தொடங்கி, மகாமகம் வரை, ஓராண்டுக்கு, பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடலாம், என ராமானந்த பாரதி தீர்த்த சுவாமிகள் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக திருவிழாவையொட்டி, கடந்த, 3ம் தேதி தேரோட்டம் நடந்தது. இளைய மகாமகத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி, நேற்று முன்தினம் நடந்தது. அஸ்திரதேவருக்கு பல்வேறு அபிஷேகம் செய்து, காலை, 11.55 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி கண்ட பின், குளக்கரையில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட்டி, ஸவாமியை வழிபட்டனர். இளைய மகாமக திருவிழாவை முன்னிட்டு, புனித நீராடுவதற்காக, விசாகப்பட்டிணத்திலிருந்து கும்பகோணத்திற்கு வந்த, விசாகப்பட்டிணம் மௌலானந்த தபோவனத்தின் பீடாதிபதி ராமானந்த பாரதி தீர்த்த சுவாமிகள் கூறியதாவது:வரும், 2016ம் ஆண்டு, கும்பகோணத்தில் மகாமக திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக, இளைய மகாமக திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. இளைய மகாமக திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. இன்றிலிருந்து அடுத்த ஆண்டு, 2016ம் ஆண்டு வரை மகாமக திருவிழா ஆண்டு தான்.

கும்பகோணத்தில், 21 நதிகளின் புனித நீர் இந்த குளத்தில் சங்கமம் ஆகிறது, என பவிஷ்ய புராணம் தெரிவிக்கிறது. எனவே, மகாமக திருவிழா வரை, எந்த ஒரு நாளிலும் கும்பகோணத்திற்கு வந்து, புனித நீராடினால், மகாமக தீர்த்தவாரியில் நீராடும் மகாபுண்ணியம் கிடைக்கும். மேலும், இக்குளத்தை சுற்றினாலே பாவம் விலகிவிடும்.இயற்கை சீற்றங்கள் அதிகமாக அச்சுறுத்துவதால் உலக நன்மை கருதி யாகங்கள், சிறப்பு வழிபாடுகள், லலிதா சகஸ்ரநாமம், அன்னதானம் போன்றவற்றை செய்ய வேண்டும். இந்த விழாவை முன்னிட்டு, மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம், இயற்கை சீற்றங்களின் வேகத்தை சாந்தியடைய செய்ய முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, ஆன்மிக பேரவை தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சிவசுப்ரமணியன், பேரவை நிர்வாகி ரவிநாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரை வழிபட உகந்த நாளாகும், தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 5 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar