மிதுனம்: (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) திடீர் பணவரவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2015 02:03
மதிப்புடன் நடக்கும் மிதுன ராசி அன்பர்களே!
சூரியன், செவ்வாய்,குரு,சனி நற்பலனை வழங்குவர். புதன் மார்ச் 21 க்கு பிறகும், சுக்கிரன் ஏப். 7 வரையும் நன்மையளிப்பர். நினைத்த செயல் விரைவில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். ஏப். 6 வரை பெண்கள் உதவிகரமாக இருப்பர். மார்ச் 27,28 தேதிகளில் விருந்து, விழா சென்று மகிழ்வீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். ஏப். 1,2 தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் சேரும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர் ஆதரவு கிடைக்கும். ஏப்ரல் 8,9 தேதிகளில் அதிர்ஷ்டவசமாக திடீர் பணவரவு இருக்கும். ஏப்ரல் 7க்கு பிறகு லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்களுக்கு, புதன் சாதகமற்று இருப்பதால் பணியிடத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மார்ச் 21க்கு பிறகு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். முன்னேற்றத்திற்கு பெண்கள் உதவிகரம் நீட்டுவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் உயர்வு நிலை பெறுவர். மார்ச் 20,21 தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
கலைஞர்கள் சிறப்பான நிலை காண்பர். ஏப்ரல் 7 வரை புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். ரசிகர் மத்தியில் புகழ் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு சாதகமான காலகட்டமாக அமையும்.
மாணவர்கள் மார்ச் 21 வரை கல்வியில் அக்கறை கொள்வது அவசியம். பிறகு போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் கூடும். புதிய சொத்து வாங்குவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் கணவரின் அன்பை பெற்று மகிழ்வர். குடும்பத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்பர். ஏப். 10,11 தேதிகளில் சந்தோஷ அனுபவம் காண்பர். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம்.
நல்ல நாள்: மார்ச் 15, 20, 21, 22, 23, 24, 27, 28 ஏப். 1, 2, 8, 9, 10, 11
கவன நாள்: மார்ச் 16, 17 ஏப். 12,13 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9 நிறம்: மஞ்சள், செந்துõரம்
வழிபாடு: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கையை வழிபடுங்கள். மார்ச் 21 வரை புதன் கிழமை குல தெய்வத்தை வழிபடுவது நல்லது.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »