Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேகம்! ஆலங்குடி குருபகவானுக்கு 10,008 சங்காபிஷேகம்! ஆலங்குடி குருபகவானுக்கு 10,008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் தவன உற்சவம்!
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் தவன உற்சவம்!

பதிவு செய்த நாள்

13 மார்
2015
10:03

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய, தவன உற்சவ விழா, இன்று வரை நடக்கிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில், கடந்த மாதம், 23ம் தேதி முதல், இம்மாதம், 5ம் தேதி வரை மாசி மாத பிரம்மோற்சவ விழா நடந்தது. 2ம் தேதி திருக்கல்யாணம், 3ம் தேதி தீர்த்தவாரி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. பிரம்மோற்சவ விழா, நிறைவடைந்த, ஏழாம் நாளில் இருந்து மூன்று நாட்கள் உற்சவர் முருகப்பெருமானுக்கு தவன உற்சவம் நடைபெறும். இந்த உற்சவம் முருகப்பெருமான் வள்ளி திருமணம் முடிந்ததும், உஷ்ணத்தில் இருப்பார், அவரை குளிர்விக்க, மூன்று நாட்கள் நடத்தப்படுவது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு, மலைக்கோவிலில் உள்ள, தவன மண்டபம் முழுவதும், தவன இலை மற்றும் மல்லிகை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் அந்த மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தவனம் மற்றும் மல்லிகை பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், நேற்றும் தவன உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு நாட்டு சர்க்கரை பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று இரவுடன், தவன உற்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
திருவாரூர்: தை வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு மகாஅபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar