Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோளீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் ... முன்குடுமீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜென்மத்தை காக்கும் ராமநாம மந்திரம்: முன்னாள் நீதிபதி பேச்சு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2015
11:03

புதுச்சேரி: திருப்புகழில், ராமாயணம் முழுவதும் கூறப் பட்டுள்ளது என, முன்னாள் நீதிபதி ராமபத்திரன் பேசினார். புதுச்சேரி ஆர்ஷ வித்யாபவன் சார்பில், அண்ணா நகர் எட்டாவது கிராசில் உள்ள சர்வசித்தி வலம்புரி விநாயகர் கோவிலில், கடந்த 22ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை ராமநவமி கொண்டாடப்படுகிறது. பல்வேறு தலைப்புகளில் தினமும் சொற்பொழிவு நடக்கிறது. நேற்று 24ம் தேதி, பதிவிரதைகள் மூன்று பேர் என் தலைப்பில், அகலிகை, தாரா, மண்டோதரி ஆகியோர் குறித்து முன்னாள் நீதிபதி ராமபத்திரன் பேசியதாவது: இந்து தர்மத்தில் நல்ல பழக்க வழக்கங்களை முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளனர். பதிவிரதைகளை நினைத்துக் கொண்டாலே நமது துன்பங்கள் தீர்ந்துவிடும். அப்படிபட்ட பதிவிரதைகளாக சீதா, அகலிகை, தாரா, மண்டோதரி ஆகியோர் திகழ்கின்றனர். கவுதம முனிவரின் மனைவியான அகலிகை, உடலால் மாசுபடுகிறாள். அவளை கல்லாக சமைய, முனிவர் சாபம் விட்டு, விமோசனமாக, ராமனின் கால் துகள்கள் பட்டால், பழைய நிலைக்கு திரும்பலாம் என தெரிவிக்கிறார். அதன்படி கல்லாக சமைந்த அகலிகை ராம நாமத்தை அனுதினமும் உச்சரிக்கிறாள். ஒருநாள் ராமனால் பாவ விமோசனம் பெறுகிறாள். அகலிகை மனக்கருவறையில் பல ஆண்டு காலம் தன்னை சுமந்ததால் தாயே என்று அழைத்ததாக ராமன் கூறுகிறார். உடலால் மாசு பட்டிருந்தாலும், தன் தவறை உணர்ந்து, உத்தமியாகிறாள். அதே போல், சமயோஜித புத்தியால், நிலமையை சமாளிக்கும் சிறந்த பதிவிரதையாகவும், சுக்ரீவனுக்கு தாய்போன்று வழிகாட்டி உள்ளார் தாரா. இறந்து கிடக்கும் தன் கணவன் உடல் மீது அழுது புலம்பும்போது கூட, ராமனை பரமாத்மா என்று அழைத்த ஒரே பெண்மணி மண்டோதரி, யாரை, யார் என்று அறிந்து கொள்வதில் வல்லவர். ெஜன்மத்தை காக்கும் மந்திரமாக ராமநாமம் உள்ளது. திருப்புகழில், ராமாயணம் முழுவதும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். வரும் 28ம் தேதி வரை தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் சொற் பொழிவு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாகம் இன்று நடைபெற்றது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
தஞ்சை ; சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் நுழைவாயில் அருகே மூவர்ண விளக்குகளால் ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதியான பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ... மேலும்
 
temple news
கர்நாடகா:  மைசூர், கர்நாடகா: தசரா விழாவில் பங்கேற்கும் 9 யானைகள் மைசூர் அரண்மனையில் பாரம்பரியமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar