Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழக்கரை சுப்பிரமணியசுவாமி ... சூரிய பிரபை வாகனத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் பவனி! சூரிய பிரபை வாகனத்தில் காஞ்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2015
05:03

சபரிமலை: சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்.,3ம் தேதி பம்பையில் ஆராட்டு நடக்கிறது. பங்குனி மாதம் உத்திரம் நாளில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு நடைபெறும் வகையில் சபரிமலையில் பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது.

Default Image
Next News

இந்த ஆண்டு திருவிழாவுக்காக நேற்று மாலை 5.30 மணிக்கு நடை திறந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் ஐயப்பனின் திருநடையில் சமர்ப்பிக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு சுத்திகலச பூஜைகள் நடத்தினார். காலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய்யபிஷேகம், உஷபூஜை போன்றவை நடைபெற்றது. 8.30 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கொடிப்பட்டத்துக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை நடத்தினார். தொடர்ந்து மேள தாள் முழங்க மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி கொடிப்பட்டத்தை எடுத்து கோயிலை வலம் வந்தார். கொடிமர சுவட்டில் தந்திரி கண்டரரு பூஜைகள் நடத்திய பின்னர் 9.38 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு, சரண கோஷங்கள் முழங்க கொடியேற்றினார். இதை தொடர்ந்து பத்து நாள் திருவிழா தொடங்கியது. இனி வரும் நாட்களில் தினமும் மதியம் உற்சவபலி நடைபெறும். ஏப்.,2ம் தேதி நள்ளிரவில் சரங்குத்தியில் பிரசித்தி பெற்ற பள்ளி வேட்டை நடைபெறும். 3ம் தேதி காலை ஒன்பது மணிக்கு சுவாமி ஆராட்டுக்காக பம்பைக்கு யானை மீது எழுந்தருளுவார். 12 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். மாலை மூன்று மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்தக்கு புறப்படும். இரவு பத்து மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா இன்று காலை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar